Map Graph

சாவகச்சேரி தொடருந்து நிலையம்

சாவகச்சேரி தொடருந்து நிலையம் அல்லது சாவகச்சேரி புகையிரத நிலையம் இலங்கையின் வடக்கே சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள தொடருந்து நிலையம் ஆகும். வடக்கையும் தலைநகர் கொழும்பையும் இணைக்கும் வடக்குப் பாதையின் ஒரு பகுதியாக, இலங்கை ரெயில்வே திணைக்களத்தினால் இலங்கையின் நடுவண் அரசின் கீழ் இந்நிலையம் நிருவகிக்கப்படுகிறது. ஈழப்போரின் காரணமாக வடக்கின் ஏனைய தொடருந்து நிலையங்களைப் போன்று சாவகச்சேரி தொடருந்து நிலையமும் சேதமடைந்து 1990 முதல் 2014 வரை இயங்காமல் இருந்து வந்தது. 2009 இல் ஈழப்போர் முடிவடைந்ததை அடுத்து வடக்கிற்கான பாதை செப்பனிடப்பட்டு வருகின்றன. கொழும்பு கோட்டையில் இருந்தான சேவைகள் சாவகச்சேரி ஊடாக யாழ்ப்பாணம் வரை 2014 அக்டோபர் 13 முதல் இயங்குகிறது. இச்சேவை காங்கேசன்துறை வரை 2015 சனவரி 2 முதல் நீடிக்கப்பட்டது.

Read article
படிமம்:Chavakachcheri_Railway_Station_-_Sri_Lanka.jpg